நான் தமிழில் எழுதுகின்றேன், நீங்கள் தமிழில் இதை படிக்கின்றீர்கள் என்றும் நம்புகின்றேன். ஆனால் என்னைபோல உங்களால் தமிழில் எழுத முடிகிறதா? இல்லை என்றால் பிழை இல்லை, ஆனால் எழுத என்றாவது முயற்சித்திருக்கின்றீர்களா? சில மாதங்களுக்கு முன்புவரை இது கொஞ்சம் கடிணமான காரியமாகத்தான் இருந்தது. ஆனால், hardy heronஇல் இம்முறையானது மிகவும் எளிதாக்கப்பட்டுவிட்டது. எப்படியென்று இதோ விளக்குகின்றேன்,
1. System > Administration > Language Supportஐ திறக்கவும்
2. இதில் எல்லா மொழிகளும் வரிசையாக தொகுக்கப்பட்டுயிருக்கும். இதில் “Tamil”ஐ தேர்வு செய்யவும். தேர்வு செய்யப்பட்டுள்ள மொழிகளின் அருகிலுள்ள சதுரத்தில் ஒரு tick குரியை கானலாம்.
3. ஒரு புதிய மொழியை தேர்வு செய்யும்பொழுது அதற்கு தேவையான சில language packagesகள் நிருவ வேண்டியிருக்கும். Install ஆகாத மொழிகளை தேர்வு செய்ய்தால் Ubuntu தானாக அதை install செய்ய உங்களின் அனுமதியை நாடும். Internet connection இருக்குமாயில் அந்த packageகளை உங்களால் நிருவிக்கொள்ளலாம்.
4. இந்த packageகளை நிருவியபின்னர், System > Preferences > SCIM Input Method Setupஐ திறக்கவும். இதில் நாம் SCIMஐ உபயோகப்ப்டுத்தும் முறையை configure செய்ய இயலும். அடிப்படையாம் நாம் SCIMஐ trigger on மற்றும் off செய்யும் முறையை நாம் குறிப்பிட வேண்டும். பொதுவாக இதை CTRL+Space அல்லது CTRL+ALT+Space ஐ பயன்பத்துவது வழக்கம்.
5. கடைசியாக நாம் செய்யவேண்டியது ஒன்றேயொன்றுதான். Logout செய்து மீண்டும் login செய்யுங்கள்.
6. இப்பொழுது நீங்கள் முன்பு குறிப்பிட்ட trigger key combinationஐ (அதாவது CTRL+Spaceஐ போன்று நீங்கள் தேர்வு செய்தது) செயல்படுத்திப்பாருங்கள். ஒரு குட்டி popup உங்கள் முன்னால் தெரியும். இதில் நீங்கள் உபயோகப்படுத்த விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கலாம். ஒன்றை மற்றும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் SCIMஐ செயல்படுத்தும் சமையத்தில் cursor மற்றும் focus ஆனது text input செய்யகூடிய text input field ஒன்றில் இருக்கவேண்டும். இல்லையென்றால் SCIM ஆனது இருந்தும் இல்லாத்து போன்றுதான் இருக்கும்.
இன்னும் ஒரு இலவச குறிப்பு: உங்களுக்கு தமிழ் typing தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். தமிழ் மொழிக்கு SCIMஇல் phonetic keyboard input உள்ளது. இதைக்கொண்டு ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை எழுத, அவை தமிழ் வார்தைகளாக தெரியும்.
மேல் கூரியவற்றை பின்பற்றுவதில் எதேனும் சந்தேகம் இருந்தால், யோசிக்காமல் இந்த blog postஇலேயே commentஆக எழுதவும்.




